• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சருக்கும், எனக்கும் மன வருத்தம் ஏற்படவில்லை – ஓபிஎஸ்

October 12, 2017 தண்டோரா குழு

முதலமைச்சருக்கும், எனக்கும் மன வருத்தம் ஏற்படவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழகத்தின் துணை முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக பிரதமர் உடன் சந்திப்பு நடைபெற்றது. கடந்த 2 முறை பிரதமரை ஓ.பி.எஸ் சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கும்படி கேட்டார், ஆனால் பிரதமர் மோடி நேரம் ஒதுக்காததால் அவரை சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மீண்டும் அவர் தமக்கு நேரம் ஒதுக்கும்படி பிரதமிடம் கேட்டுக் கொண்ட பிறகு, அவரை சந்திப்பதற்காக மோடி நேரம் ஒதுக்கினார்.

இதையடுத்து, நேற்று டெல்லி சென்ற அவர் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்ததித்து பேசினார்.இந்த சந்திப்பின்போது ஓ.பி.எஸ் உடன் அவரது ஆதரவாளரான மைத்ரேயனும் இருந்தார்.
சரியாக 40 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்த சந்ததிப்புக்கு பின் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியுடன் அரசியல் குறித்து பேசவில்லை.தேவையான நிலக்கரியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நோக்கங்களை நிறைவேற்றவே நானும், எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்தோம். முதலமைச்சருக்கும், எனக்கும் எந்த மன வருத்தம் ஏற்படவில்லை.அமைச்சர் தங்கமணி பிரதமர் சந்திப்பின் போது உடன் வராததில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறினார். மேலும், மத்திய மருத்துவ குழு விரைவில் தமிழகம் வரும் என பிரதமர் உறுதியளித்ததாகவும் ஓபிஎஸ் கூறினார்.

மேலும் படிக்க