• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தானில் பிரதமர் அலுவலக சொகுசு கார்கள் ஏலம்..!

September 18, 2018 தண்டோரா குழு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளின் சொகுசு கார்களை ஏலம் விட்டு,வருவாய் ஈட்டி பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அன்மையில் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்கான் மிக மோசமான பொரளாதார நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் அந்நாட்டின் பொருளாதரத்தை சீரமைக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.முதல்கட்டமாக ஆடம்பரமான பிரதமர் மாளிகையில் தங்காமல்,தனது சொந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார்.இதையடுத்து அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளின் சொகுசு கார்களை விற்று பணம் ஈட்ட உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது.அதில் 70 ஆடம்பர கார்கள் ஏலம் விடப்பட்டது. அதில் 8 புல்லட் புரூப் கார்கள் மற்றும் 4 மெர்சிடஸ்பென்ஸ் கார்கள் உள்ளிட்டவை அடங்கும்.இதே போல ஹெலிகாப்டர்களும் தனியாக வேறு ஒரு இடத்தில் ஏலத்தில் விடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன் மூலம் கிடைக்கும் வருமானம் அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு சிறிதளவு உதவும் என்று கருதுகின்றனர்.

அண்மையில் பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான்,அரசியல்வாதிகள் மற்றும் மக்களின் மனநிலை மாற வேண்டும் என்றும்,நாம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம் இதனை உடனடியாக மாற்ற வரவில்லை எனில்,பேரழிவை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க