• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பத்மாவதி படத்தை வெளியிட்டால் போராட்டம் தீவிரமாகும் – சுக்தேவ் சிங் கோகா

November 17, 2017 தண்டோரா குழு

பத்மாவதி படத்தை வெளியிட்டால் போராட்டம் தீவிரமாகும் என ராஜ்புட் ராஷ்டிரிய கர்ணி சேனாவின் அகில இந்திய தலைவர் சுக்தேவ் சிங் கோகா கூறியுள்ளார்.

ராஜ்புட் ராஷ்டிரிய கர்ணி சேனா அமைப்பின் ஆலோசனை கூட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவ்வமைப்பின் அகில இந்திய தலைவர் சுக்தேவ் சிங் கோகா கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

இந்தியா முழுவதும் வரும் டிசம்பர் 1 ம் தேதி முதல் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பத்மாவதி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ராணி பத்மாவதியின் வரலாற்றை திரித்து கூறி அரச குடும்பத்தையும், இந்து கலாச்சாரத்தையும் அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. ராணி பத்மாவதியின் வரலாற்றை தவறாக சித்தரிக்கும் பத்மாவதி திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட கூடாது மீறி வெளியிட்டால் போராட்டம் தீவிரமாகும் என கூறினார்.

மேலும், ராணி பத்மாவதி பத்மாவதி குறித்து தவறான கருத்தை ஏற்படுத்தும் இந்த படத்தை மத்திய,மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க