November 9, 2018 தண்டோரா குழு
உதகையில் அதிமுகவினர் நடிகர் விஜய்யின் உருவம்மையை எரித்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அஇஅதிமுக உதகை நகர கழகம் சார்பில் நகர செயலாளர் சண்முகம் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் சிவலிங்கம் முன்னிலையில் சர்கார் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்,சன் பிச்சர்ஸ்,இயக்குநர் முருகதாஸ் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.முன்னதாக காபி அவுஸ் சதுக்கத்தில் நடிகர் விஜய் உருவ பொம்யை எரிக்கப்பட்டது.
அப்போது,நடிகர் விஜய்யை எதிர்த்தும் ஜெயலலிதாவை வாழ்த்தியும் கோசங்கள் எழுப்பட்டன.இதில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் இம்தியாஸ்,நிஷாந்தி,நகர கழக பொறுப்பாளர்கள் ஆட்டோ சாந்து,தகவல் தொழிற்நுட்ப பிரிவு ராஜா மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.