• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நவம்பர் 8-ம் தேதி கருப்பு உடை ஆர்பாட்டம்-ஸ்டாலின்

October 24, 2017 தண்டோரா குழு

பணமதிப்பு ரத்து நடவடிக்கை எடுத்த மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து நவம்பர் 8-ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது.

கடந்த 2016 நவம்பர் 8 ம் தேதி கறுப்பு தினத்தை ஒழிக்க, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், பணமதிப்பு ரத்து நடவடிக்கை எடுத்த மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து நவம்பர் 8-ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது. அன்றைய தினம் திமுக தொண்டர்கள் கருப்புச் சட்டை அணிந்து கருப்பு தின ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். ஒரே கருத்துடைய கட்சிகள் அனைத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக தொண்டர்கள் பணமதிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட வணிகர்கள், விவசாயிகள், திரைத்துறையினரும் பங்கேற்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதைபோல், ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிக்கப்பட்ட நவ.,8 ம் தேதியை, எதிர்க்கட்சிகள் சார்பில் கறுப்பு தினமாக அனுஷ்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். அன்று நாடு முழுவதும், எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க