• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் மழை நீடிக்கும் – 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

October 31, 2017 தண்டோரா குழு

வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை, உட்பட 10 மாவட்டங்களில் 48 மணி நேரத்திற்கு பலத்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,

” தென்மேற்கு வங்க கடலில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி இலங்கை அருகே மையம் கொண்டு இருந்தது.இதன் காரணமாக சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட தமிழகத்தின் 10 கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில்,இந்த மேலடுக்கு சுழற்சியானது,மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையே மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ளது.இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களிலும் புதுவையிலும் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும்.

மேலும்,கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும்”. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க