• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென்கொரிய மீனவர்களை விடுவித்தது வடகொரியா

October 28, 2017 தண்டோரா குழு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தென் கொரிய மீனவர்களை வட கொரியா விடுதலை செய்துள்ளது.

தென் கொரிய மீனவர்கள் வட கொரியாவின் ராணுவ எல்லைபகுதியில் கடந்த சனிக்கிழமை(அக் 21),மீன் பிடித்துகொண்டிருந்தனர். வட கொரிய கடற்படை கப்பல்,அந்த பகுதியில் ரோந்து வந்தபோது, ராணுவ எல்லை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தென் கொரிய மீனவர்களை கைது செய்து, அவர்களுடைய படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில்,வழி தவறி வந்தது தெரிய வந்ததாலும்,அதற்காக மன்னிப்பு கேட்டு கொண்டதால், அவர்களை வட கொரியா நாட்டின் அரசு விடுதலை செய்தது.அவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பாக்கப்படுகின்றது.

மேலும் படிக்க