• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நேபாளில் சவுப்படியில் உயிரிழந்த பெண்!

January 10, 2018 தண்டோரா குழு

நேபாளில் மாதவிடாய் காலத்தில் தனியே தங்கவைக்கப்பட்ட பெண்,உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் உள்ள பல சமூகங்களில் பெண்களை மாதவிடாய் காலத்தில்,தூய்மையற்றவர்களாக
கருதுகின்றனர்.அந்த நேரத்தில் பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு, காட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிசையில் தனியே தங்க வேண்டும்.அவர்கள் தங்கும் அந்த குடிசைக்கு ‘சவுப்படி’ என்று பெயர்.

இந்நிலையில், நேபாள் நாட்டின் அகும்பில் மாவட்டத்தை சேர்ந்தவர் கவுரி பைக்(21) மாதவிடாய் காரணமாக ‘சவுப்படி’யில் தனியே தங்கியிருந்தார்.அப்போது குளிர் காய்வதற்காக, அவர் நெருப்பூட்டி உள்ளார். அந்த நெருப்பின் புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தார்.

இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. தகவல் அறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, கவுரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்த முறை தடை செய்யப்பட்டது.இருப்பினும், நேபாளத்தின் தொலைதூர பகுதிகளில் இந்த பழக்கம் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது.

மேலும் படிக்க