January 22, 2018
தண்டோரா குழு
எம்.பி.பி.எஸ்,பி.டி.எஸ் மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்-ல் சேரமுடியும்.கடந்த 2016 ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படியில் எம்.பி.பி.எஸ் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது.
2016 ம் ஆண்டு தமிழகத்துக்கு மட்டும் நீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.2017 முதல் தமிழகத்தில் நீட் தேர்வுப்படி மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இதற்கிடையில்,கடந்த ஆண்டு பொது தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வினால் மருத்துவ கல்லூரியில் சேர முடியாததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் பெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு 2018 ம் ஆண்டிற்கான நீட் தேர்வுகள் மே 6 ம் தேதி நடைபெறும் என்றும் எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.