• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜப்பான் சூப்பர் பார்முலா ரேஸில் வெற்றிபெறுவோம். நரேன் கார்த்திகேயன் நம்பிக்கை

July 11, 2016 தண்டோரா குழு

தனியார் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் அழகு நிலையம் ஆகியவை இந்தியாவின் பார்முலா ஒன் ரேஸ் போட்டியாளர் நரன் கார்த்திகேயனால் துவக்கிவைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்ட நரேன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அக்டோபர் மாத இறுதியில் ஜப்பானில் நடைபெறவுள்ள சூப்பர் பார்முலா சாம்பியன்ஷிப் போட்டியில் தங்களது குழு மிகச் சிறப்பாக செயல்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த போட்டிகளில் சிறு சறுக்கல்கள் இருந்தாலும் தற்போது ஒரு குழுவாக இணைந்து பயிற்சி மேற்கொண்டுள்ளோம், எனவே மிக அருமையான திறமையை வெளிப்படுத்தமுடியும் எனத் தெரிவித்தார்.

செப்டம்பரில் நடக்க இருந்த போட்டி நிலநடுக்கத்தால் கைவிடப்பட்ட போதும், அக்டோபரில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற முழு முயற்சி எடுத்து வருகிறோம் எனத் தெரிவித்தார். மேலும் ஆரம்பக்கால கட்டத்தில் தான் உடற்பயிற்சி பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்ததாகவும், பின்னர் உடற்பயிற்சி மேற்கொண்டதால் திறமையிலும் வாழ்விலும் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் வயதானவர்களைக் கட்டிலும் தற்போது இளைஞர்கள் தான் அதிக உடல் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். எனவே ஜன்க் உணவுகளைத் தவிர்த்து நாள் ஒன்றிக்கு குறைந்த நேரத்தையாவது உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க