• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜகவுக்கு ஒரு நீதி; அதனை எதிர்க்கும் மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதியா? – மு.க.ஸ்டாலின்

October 9, 2018 தண்டோரா குழு

பாஜகவுக்கு ஒரு நீதி; அதனை எதிர்க்கும் மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதியா? இதனை கடுமையாக கண்டிக்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக,ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் இன்று கைது செய்யப்பட்டார்.இதையடுத்து,நக்கீரன் கோபாலுக்கு மருத்துவ பரிசோதனை நடக்கும் திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு வந்த மு.க.ஸ்டாலின் அவரை சந்தித்தார்.பின்னர் மருத்துவமனை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

“நக்கீரன் கோபால் கைது சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமோ என்ற சந்தேகம் எழுப்புகிறது.பாஜகவுக்கு ஒரு நீதி; அதனை எதிர்க்கும் மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதியா? இதனை கடுமையாக கண்டிக்கிறேன்”. இவ்வாறு பேசினார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

“பொதுநலனில் கொண்டுள்ள அக்கறையினால் பல்வேறு பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து வெளிப்படுத்துவதில் தணியாத ஆர்வமுடன் செயலாற்றி வரும் மூத்த பத்திரிகையாளரும்,நக்கீரன் இதழின் ஆசிரியருமான நக்கீரன் கோபாலை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் அதிமுக அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க