• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிடா விருந்தில் இளைஞர் கொலை;பாஜக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு

October 2, 2018 தண்டோரா குழு

கோவையில் கிடா விருந்தின் போது விநாயகர் சதுர்த்தி வரவு செலவு கணக்கு பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பா.ஜ.க உறுப்பினர் நாகராஜ் என்பவரை,பா.ஜ.க இளைஞர் அணி நிர்வாகி குட்டி(எ)கந்தசாமி பாட்டிலால் குத்தியதில் உயிரிழந்தார்.

கோவை ஆலாந்துறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி வசூல் பணத்தில் கடந்த 30ம் தேதி பா.ஜ.க வினர் மதுவுடன் கிடா விருந்து வைத்துள்ளனர்.இந்த விருந்தில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.அதில்,விருந்து முடித்து 35பேர் சென்ற நிலையில்,துடியலூரை சேர்ந்த பாஜக உறுப்பினர் நாகராஜ்,நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த பாஜக இளைஞரணி நிர்வாகி குட்டி(எ) கந்தசாமி உட்பட 5 பேர் எழுவாய்கள் சாலை கணபதிக்காரர் தோட்டத்தில் மது அருந்தியுள்ளனர்.

அப்போது,விநாயகர் சதுர்த்தி வரவு செலவு கணக்கு பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் கந்தசாமி மது பாட்டிலால் குத்தியதில் நாகராஜ் படுகாயமடைந்தார்.இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இச்சம்பவம் தொடர்பாக ஆலந்துறை காவல்துறையினர்,தலைமறைவாக உள்ள பா.ஜ.க மாவட்ட இளைஞரணி நிர்வாகி கந்தசாமியை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க