• Download mobile app
01 Jul 2025, TuesdayEdition - 3429
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜப்பான் பிரதமராக அபே மீண்டும் தேர்வு – பிரதமர் மோடி வாழ்த்து

October 23, 2017 தண்டோரா குழு

ஜப்பான் பிரதமராக பதவியேற்கும் ஷின்சோ அபேவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 28ஆம் தேதி ஜப்பான் நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டார்.இந்நிலையில் ஜப்பானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.

மொத்தமுள்ள 465 இடங்களில் 1200 போட்டியளர்கள் போட்டியிட்டனர்.இதில் 312 இடங்களில் ஷின்சோ அபே கட்சி வெற்றி பெற்றது.இதனைத் தொடர்ந்து ஷின்சோ அபே மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி,

“என் இனிய நண்பர் அபே தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். இரு நாடுகளின் உறவு மேலும் வலுப்படும் என்ற நம்பிக்கை உள்ளது”. என்று டுவிட் செய்துள்ளார்.

மேலும் படிக்க