• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக எமர்சன் மின்காவாவா பதவியேற்பு

November 24, 2017 தண்டோரா குழு

ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் துணை குடியரசு தலைவர் எமர்சன் மின்காவாவா(75) குடியரசு தலைவராக பதவியேற்றார்.

கடந்த 37 ஆண்டுகளாக ஜிம்பாப்வே நாட்டின் குடியரசு தலைவராக இருந்த ராபர்ட் முகாபி, தனது மனைவியின் அரசியல் முன்னேற்றதற்காக, அந்நாட்டின் துணை குடியரசு தலைவராக இருந்த மின்காவாவாவை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பதவி நீக்கம் செய்தார்.

இதனால், ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டது. ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நீக்கப்பட்ட துணை அதிபர் நாங்காவாவுக்கு ஆதரவாக நின்றார். இதனால், அந்நாட்டு அரசியலில் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது.அதிபர் முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவத்தின் கண்காணிப்பில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதனால், ராபர்ட் முகாபி தனது குடியரசு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா குறித்து கேள்விப்பட்ட அந்நாட்டின் மக்கள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக எம்மர்சன் நாங்காக்வா இன்று பதவி ஏற்றார்.இந்நிகழ்ச்சியில் அந்நாட்டின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டு தூதர்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க