• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் பேசியது தவறு என்றால் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறேன் -கருணாஸ்

September 21, 2018 தண்டோரா குழு

நான் பேசியது தவறு என்றால் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறேன் என கருணாஸ் கூறியுள்ளார்.

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.அப்போது,தமிழக முதல்வர் குறித்தும் காவல் துறை அதிகாரி மற்றும் சாதி குறித்தும் வகையில் பேசியுள்ளார்.இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கிடையில்,யூடியூபில் வெளியான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் முதல்வர்,காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதையடுத்து கருணாஸ் தலைமறைவாகினார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ்,

“நான் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தவறான தகவலை பரப்புகிறார்கள்.எந்த சமுதாயம் குறித்தும் நான் இழுவாக பேசவில்லை.நான் இழிவாக பேசியதாக கூறுவது முற்றிலும் தவறு.வன்முறையை தூண்டும் வகையில் நான் என்றைக்கும் பேசியது கிடையாது.நான் பேசிய 47நிமிட வீடியோ யூட்யூபில் உள்ளது.நான் பேசிய முழு வீடியோவை கேட்டபின் நடவடிக்கை எடுக்கவேண்டும்.நான் பேசியது தவறு என்றால் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறேன்.’கூவத்தூர் குறித்து நான் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்து கொள்கிறேன்.தவறு செய்யும் அதிகாரிகளை தண்டிக்காதது ஏன்?” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க