• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழுக்களை அமைக்காவிட்டால் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

October 28, 2016 தண்டோரா குழு

அனைத்துக் கட்சி கூட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில், அது தொடர்பான தீர்மானத்தை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் கொடுக்க தலைமைச் செயலகத்துக்கு மு.க. ஸ்டாலின் சென்றார்.

பின்னர், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
மதிப்பீட்டுக் குழு, பேரவைக்குழு, சட்டவிதிகள் குழு உள்ளிட்ட 12 குழுக்கள் இதுவரை அமைக்கப்பட வேண்டும். ஆனால், ஆட்சி அமைந்து 5 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை இந்தக் குழுக்கள் அமைக்கப்படவில்லை. இது தொடர்பாக ஏற்கெனவே நானும், துணைத் தலைவர் துரைமுருகனும் சட்டப் பேரவையில் பேரவைத் தலைவரிடம் பேசியிருக்கிறோம். அப்போது அவர் சட்டப் பேரவை குழுக்களை அமைப்பதாக கூறினார். அவர் அளித்த உறுதிமொழி சட்டப் பேரவைக் குறிப்பிலும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவை குழுக்கள் இதுவரை அமைக்கப்படாததால் அது தொடர்பாக ஒரு கடிதத்தைச் சட்டப் பேரவைத் தலைவர் கொடுப்பதற்காகவே பேரவைக்கு வந்தோம். ஆனால், அலுவலகத்தில் அவர் இல்லை. எனவே, பேரவைச் செயலாளரிடம் கடிதத்தை அளித்திருக்கிறோம்.

சட்டப் பேரவை குழுக்களை அமைப்பது தொடர்பாக பேரவைத் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவோம்.தேவைப்பட்டால், தமிழக பொறுப்பு ஆளுநரையும் சந்தித்துப் பேசுவோம்.

கடந்த 25-ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின் நகலை தமிழக முதல்வரின் பொறுப்புக்களைக் கூடுதலாகக் கவனித்து வரும் நிதியமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்திடம் கொடுக்க முற்பட்டோம்.ஆனால், அவரும் அலுவலகத்தில் இல்லை. எனவே, தீர்மான நகலை தலைமைச் செயலாளரிடம் கொடுத்துள்ளோம்” என்றார்.

மேலும் படிக்க