• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உயிரிழந்த ராணுவ வீரர் 7 ஆண்டிற்கு பின் வீடு திரும்பிய அதிசயம்.

June 17, 2016 தண்டோரா குழு

இறந்த ஒருவர் உயிருடன் திரும்பி வந்தால் அவரை பார்க்கும் குடும்பதிருடைய மன நிலை எப்படி இருக்கும்?

ஆனால், உத்தரகாண்ட் மாநில எல்லையில் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட ராணுவ வீரர் ஒருவர் சுமார் 7 ஆண்டுகளுக்கு பின் வீட்டிற்கு திரும்பிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டிற்கு இதை விட சிறந்த திரைக்கதை கிடைக்க வாய்ப்பில்லை என்று தான் கூற வேண்டும்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தை சேர்ந்த பிடேடா கிராமத்தை சேர்ந்தவர் தரம்வீர் சிங். இவர் டேராடூனில் உள்ள 66வது ஆயுதப்படை ரெஜிமண்ட் பிரிவில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த 2009ம் ஆண்டு, டேராடூன் அருகே உள்ள சக்ரதா சாலைக்கு சக வீரர்களுடன் ராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அந்த வாகனத்தில் சென்ற மூன்று ராணுவ வீரர்கள் மாயமானதாகக் கூறப்பட்டது.

ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, விபத்தில் சிக்கிய இரண்டு வீரர்கள் தங்களது முகாமிற்குத் திரும்பினர். ஆனால் தரம்வீர் சிங் குறித்து மட்டும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. மூன்று ஆண்டுகளாகியும் தரம்வீர் சிங் குறித்த தகவல்கள் கிடைக்காததால், ராணுவத்தினர் அவர் உயிரிழந்ததாக அறிவித்தனர்.

இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம், தரம்வீர் சிங்கின் தந்தை தனது வீட்டின் கதவு நள்ளிரவில் தட்டப்பட்ட சத்தத்தைக் கேட்டு அதனைத் திறந்து பார்த்தார். அப்போது அவர் கண்ட காட்சியால் அவரது கண்கள் குளமாக மாறியது. அவர் கண்ட காட்சி, அவரது மகன் தரம்வீர் சிங் உயிருடன் நின்று கொண்டிருந்ததை தான். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இறந்த தனது கணவர் திரும்பி வந்ததை அடுத்து அவரது மனைவி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினர் தரம்வீர் சிங்கிடம் கேட்ட போது, கடந்த 2009ம் ஆண்டு நிகழ்ந்த விபத்திற்குப் பிறகு தனக்கு எந்தவித ஞாபகங்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார். அப்போது ஹரித்வாரில் உள்ள தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்ததாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் தன்மீது ஒரு இருசக்கர வாகனம் மோதியதாகவும், அதில் நிலைகுலைந்த என்னை இருசக்கர ஓட்டுநர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை வழங்கிய பொது பழைய நினைவுகள் திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய நபரிடம் தன்னுடைய நிலையை எடுத்துக் கூறியதை அடுத்து அவர் 500 ரூபாய் பணம் கொடுத்து சொந்த ஊரான பிடேடா கிராமத்திற்கு செல்லுமாறு கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

ஏழு ஆண்டுகளுக்கு முன், விபத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட ராணுவ வீரர் மீண்டும் உயிருடன் திரும்பிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தரம்வீர் சிங் மீண்டும் திரும்பியதால் அவரது குடும்பத்தினரும், பொதுமக்களும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க