November 2, 2018 தண்டோரா குழு
சென்னையில் போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் இன்று சந்தித்தார்.
காமென்வெல்த் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையையும் வரலாற்றையும்,படைத்தவர் மேரி கோம். இந்நிலையில்,நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் குழந்தைகளுக்காக நடத்தும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மேரி கோம் சென்னை வந்துள்ளார்.
இதையடுத்து,சென்னையில் போயஸ் தோட்ட வீட்டில் நடிகர் ரஜினிகாந்துடன் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சந்தித்து பேசினார்.அப்போது இருவரும் குத்துச்சண்டை வீரர் போல் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.