• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விமானத்தில் மார்க் ஸூகர்பெர்க்கின் சகோதரிக்கு பாலியல் தொல்லை

December 2, 2017 தண்டோரா குழு

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க்கின் சகோதரிக்கு அமெரிக்க விமானத்தில் பயணி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க்கின் சகோதரி ராண்டி சக்கர்பெர்க் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து மெக்சிகோவின் மசட்லான் நகருக்கு அலாஸ்கா ஏர்லைன்ஸில் பயணம் செய்தார். அந்த பயணத்தின்போது, அவருக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து அந்த விமான நிறுவனத்தின் நிர்வாகிக்கு கடிதம் அனுப்பினார்.

இதுகுறித்து அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,

“விமானத்தின் முதல் வகுப்பில் பயணம் செய்தவர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டது. அப்போது, என் அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவர்,குடிபோதையில் என்னிடம் ஆபாசமாக பேசினார். அந்த விமானத்தில் பயணம் செய்த பெண்களில் உடல்களை ஆபாசமாக வர்ணித்தார்.

இது சம்பந்தமாக விமானத்தில் பணிபுரியும் ஊழியரிடம் புகார் அளித்தேன். அந்த நபர் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் வழக்கமாக பயணம் செய்பவர். இச்சம்பவத்தை தனிபட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம், வேண்டுமானால், நீங்கள் வேறு ஒரு இருக்கையில் அமர்ந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்டது நான்?நான் ஏன் வேறு ஒரு இருக்கையில் அமரவேண்டும்? இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம் என்றும்,அந்த நபரின் பயண சலுகைகளை திரும்ப பெற்றுள்ளோம் என்று அந்த ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க