• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மண்ணின் மைந்தனுக்கு ‘பூஷண்’ ‘விருது, மராட்டிய எம்.எல்.ஏ பரிந்துரை

August 1, 2016 தண்டோரா குழு

உலகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தது ரஜினியின் கபாலித் திரைப்படம் என்றால் நடிகர் ரஜினிகாந்தின் திறமையை வார்த்தையால் வர்ணிக்க முடியாது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான அனில் கொடெ நடிகர் ரஜினிகாந்திற்கு மகாராஷ்டிராவின் உயரிய விருதான பூஷண் விருதை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஜினி காந்த் என அழைக்கப்படும் ஷிவாஜிராவ் கைக்வட் மகாராஷ்டிராவிலுள்ள கோல்காப்பூரைச் சேர்ந்தவர்.

தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகத்திற்கும் இவரது பங்களிப்பு ஏராளம். 65 வயதிலும் இவரது பாணியும், நடிப்பும் இளைய சமுதாயத்தினரை எழுச்சியூட்டுகின்றன. ரஜினி மராட்டிய மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பவர். ஆகையால் இவ்விருதைப் பெற முற்றிலும் தகுதியானவர் என்று அனில் கொடெ தெரிவித்தார்.

மேலும் பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்த மாநில அரசு சபையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் உலகளவில் 8,000 திரையரங்குகளில் கபாலி திரையிடப்பட்டிருப்பது ரஜினியின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று தன் வாதத்திற்கு அனில் கொடெ வலுசேர்த்தார்.

மேலும் படிக்க