• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாயை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு சுற்றுலா சென்ற மகன்

October 31, 2017 தண்டோரா குழு

மேற்கு வங்கத்தில், 96 வயதான தாயை,வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு, விடுமுறைக்கு சென்ற மகனின் இரக்கமற்ற செயல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின், அனந்தபூர் நகரில், சபிதா நாத்(96), அவருடைய மூத்த மகன் பிகாஷ் உடன் வசித்து வருகிறார். அவருடைய மகன் சுற்றுலா செல்ல முடிவு செய்திருந்தார். அவருடைய தாய் சபிதா, அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் கதவுகளை வெளியே பூட்டிவிட்டு, சுற்றுலா சென்றுவிட்டார்.

இந்நிலையில் சபிதாவின் மகள்கள் தாயாரை பார்க்க வந்தபோது, கதவு பூட்டப்பட்டு இருப்பதை கண்டு, இருவரும் சபிதாவின் அறையின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர்.அங்கே வாந்தி நாற்றத்துடன் சபிதா அறையில் படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உடனே அருகிலிருந்தவர்கள் உதவியுடன், கதவை உடைத்து,அவரை அங்கிருந்து மீட்டு தங்களுடன் அழைத்து வந்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து சபிதாவின் மகள்கள் ஆனந்தபூர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.

இது குறித்து சபிதா கூறுகையில்,

“நான் தூங்கி எழுந்தபோது, வீட்டில் யாரும் இல்லை. அவர்கள் எல்லோரும் விடுமுறைக்கு சென்றுவிட்டனர் என்று என்னால் உணர முடிந்தது. என்னால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் சாப்பிட சில பிஸ்கட் இருந்தது.நான் அவற்றை சாப்பிட முயன்றபோது, என்னால் சாப்பிட முடியவில்லை.வாந்தி எடுக்கவேண்டும் போலிருந்தது. ஆனால் கழிவறைக்கு செல்ல கூட உடம்பில் பெலன் இல்லை. அதனால், அறையிலேயே வாந்தி எடுத்து விட்டு, அறையை சுத்தம் செய்தேன்” என்று கூறினார்.

மேலும் படிக்க