• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தாயை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு சுற்றுலா சென்ற மகன்

October 31, 2017 தண்டோரா குழு

மேற்கு வங்கத்தில், 96 வயதான தாயை,வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு, விடுமுறைக்கு சென்ற மகனின் இரக்கமற்ற செயல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின், அனந்தபூர் நகரில், சபிதா நாத்(96), அவருடைய மூத்த மகன் பிகாஷ் உடன் வசித்து வருகிறார். அவருடைய மகன் சுற்றுலா செல்ல முடிவு செய்திருந்தார். அவருடைய தாய் சபிதா, அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் கதவுகளை வெளியே பூட்டிவிட்டு, சுற்றுலா சென்றுவிட்டார்.

இந்நிலையில் சபிதாவின் மகள்கள் தாயாரை பார்க்க வந்தபோது, கதவு பூட்டப்பட்டு இருப்பதை கண்டு, இருவரும் சபிதாவின் அறையின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர்.அங்கே வாந்தி நாற்றத்துடன் சபிதா அறையில் படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உடனே அருகிலிருந்தவர்கள் உதவியுடன், கதவை உடைத்து,அவரை அங்கிருந்து மீட்டு தங்களுடன் அழைத்து வந்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து சபிதாவின் மகள்கள் ஆனந்தபூர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.

இது குறித்து சபிதா கூறுகையில்,

“நான் தூங்கி எழுந்தபோது, வீட்டில் யாரும் இல்லை. அவர்கள் எல்லோரும் விடுமுறைக்கு சென்றுவிட்டனர் என்று என்னால் உணர முடிந்தது. என்னால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் சாப்பிட சில பிஸ்கட் இருந்தது.நான் அவற்றை சாப்பிட முயன்றபோது, என்னால் சாப்பிட முடியவில்லை.வாந்தி எடுக்கவேண்டும் போலிருந்தது. ஆனால் கழிவறைக்கு செல்ல கூட உடம்பில் பெலன் இல்லை. அதனால், அறையிலேயே வாந்தி எடுத்து விட்டு, அறையை சுத்தம் செய்தேன்” என்று கூறினார்.

மேலும் படிக்க