• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்திற்குப் பொறுப்பு ஆளுநர் நியமனம்

September 1, 2016 தண்டோரா குழு

மகாராஷ்டிர மாநில ஆளுநருக்குக் கூடுதல் பொறுப்பாகத் தமிழக ஆளுநராக நியமித்து குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தமிழக ஆளுநராக கே.ரோசையா நியமிக்கப்பட்டார்.ஆளுநர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.அதன்படி, ரோசையாவின் பதவிக் காலம் நிறைவடைந்தது.

இதையெடுத்து தமிழக ஆளுநராக குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் நியமிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தன.

இந்நிலையில், தமிழக ஆளுனரை நியமிக்கும் வரை அப்பதவியின் பொறுப்பை கூடுதலாக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சென்னமனேணி வித்யாசாகர் ராவ் கவனிப்பார் எனக் குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி தற்போது உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநர் ரோசையா,ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் வெமுரு என்ற ஊரில் 1933 ஆம் ஆண்டு ஜூலை 4ம் தேதி பிறந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் ஆந்திர அமைச்சரவையில் இருமுறை போக்குவரத்து அமைச்சராகவும், ஒருமுறை உள்துறை அமைச்சராகவும்,4 முறை நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

மேலும்,ஆந்திராவில் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின் ரோசையா முதல்வராக நியமிக்கப்பட்டார்.ஆனால்,தெலுங்கானா போராட்டத்தைத் தொடர்ந்து,கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த 2 மாதத்தில் தமிழக ஆளுநராக ரோசையா நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க