• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் ஆளுநர் விடுதலை செய்வார் – மதுரை ஆதினம்

September 10, 2018 தண்டோரா குழு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் ஆளுநர் விடுதலை செய்வார் என மதுரை ஆதினம் அருணகிரிநாதர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

“குட்கா ஊழல் பொறுத்தவரை சி.பி.ஐ மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.ஊழல் அமைச்சர்கள் மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார்.எதிர்கட்சி என்ற முறையில் திமுக தன்னுடைய கடமையை ஆற்றி வருகிறது எனவும்,திமுக பலப்பட வேண்டுமென்றால் ஸ்டாலினும்,அழகிரியும் இணைய வேண்டுமெனவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் ஓபிஎஸ் ஈ.பி.எஸ் நல்லாட்சி செய்கிறார்கள்,மத்தியில் மோடியும் நல்ல ஆட்சி செய்கிறார் என கூறிய அவர்,வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவில் பாஜகவும்,தமிழகத்தில் அதிமுக நல்ல முறையில் வெற்றி பெறும் என தெரிவித்தார்.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை ஆளுநர் நிச்சயம் விடுதலை செய்ய உத்தரவிடுவார்.

நித்தியானந்தா தரப்பிலிருந்து அச்சுறுத்தல் உள்ளதாகவும்,ஆனால் அவர் மீண்டும் ஆதீனத்தில் நுழைய முடியாது எனவும் அவர் கூறினார்.மேலும்,பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி க்குள் கொண்டு வந்து 30 ரூபாய்க்கு கொண்டு வர வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளதாகவும்,சோபியா விமானத்தில் அப்படி நடந்திருக்க கூடாது எனவும்,அதேசமயம் அப்பெண்ணை காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்க கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா போல எல்லா நடிகர்களும் வர முடியாது எனவும்,ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள அமைச்சர்களுக்கு பதிலாக குற்றச்சாட்டுகள் இல்லாதவர்களை முதல்வர் அமைச்சராக்குவார் எனக் கூறினார்.மேலும்,எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோவில்களில் நடைபெறும் ஊழல்களை ஒழிக்க முடியாது”. இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க