• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மதுரை ஆதினம் மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய தடை

October 11, 2017 தண்டோரா குழு

மதுரை ஆதினம் மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

அருணகிரிநாதரின் நிர்வாகத்தில் தலையிடவும் ,ஆதீன மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதிக்கவும் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேற்று மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு இன்று நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, எக்காரணத்தைக் கொண்டும் நித்யானந்தா மடத்துக்குள் நுழையக் கூடாது. நான்கு வாரக் காலத்திற்கு இந்த தடை நீடிக்கும்.நான்கு வாரக் காலத்திற்குப் பின் மீண்டும் விசாரணைக்கு வரும் போது,நித்யானந்தா தரப்பினரும், அரசு தரப்பில் தலைமைச் செயலாளர், அறநிலையத் துறைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க