• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மகாராஷ்டிராவுக்கு பதிலாக மத்தியபிரதேஷம் சென்ற ரயில்

November 23, 2017

புதுதில்லியிலிருந்து மகாராஷ்டிராவுக்கு செல்லவேண்டிய ரயில் தவறுதலாக மத்திய பிரதேஷ் மாநிலத்திற்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த சுமார் 15௦௦ விவசாயிகள் கடந்த நவம்பர் 2௦ம் தேதி புதுதில்லியில் நடந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டனர். இந்த போராட்டத்தில் இந்தியாவின் மற்ற மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளும் கலந்துக்கொண்டனர்.

இப்போரட்டம் முடிந்த பிறகு நவ 20 இரவு ‘ஸ்வாபிமானி எக்ஸ்பிரஸ்’ மூலம் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு திரும்பி வந்தகொண்டிருந்தனர். ஆனால், அந்த ரயில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு செல்வதற்கு பதிலாக மத்திய பிரதேஷ் மாநிலத்தின் பன்மூர் ரயில் நிலையம் சென்றடைந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் ரயில் தடங்கள் மீது அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதனையடுத்து அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து மத்திய பிரதேஷ் மாநிலத்தின் பன்மூர் ரயில் நிலையத்திலிருந்து மகாராஷ்டிராவிற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும்,இந்த தவறு ஆக்ரா கட்டுப்பாட்டு அறை ஊழியரின் கவனகுறைவால் ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க