• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அலட்சியத்தால் பலியான லாரி ஓட்டுனர்

July 23, 2016 வெங்கி சதீஷ்

காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரி கரை பகுதியில் உள்ள இந்திராநகரில் கட்டுமானப்பணிக்காக மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று வீட்டின் அருகே மணலைக் கீழே கொட்டுவதற்காகப் பின்புற பக்கெட் அமைப்பை ஹைட்ராலிக் மூலம் தூக்கியுள்ளார்.

முறைப்படி கிளீனர் உடனிருந்து பார்த்து சொல்ல வேண்டிய வேலையை கிளீனர் இல்லாமலேயே செய்ததால் லாரியின் மேலே சென்ற மின்சாரக் கம்பியை கவனிக்க மறந்துவிட்டார் ஓட்டுனர் ஏழுமலை(37).

இதையடுத்து லாரி முழுவதும் மின்சாரம் பாய்ந்து ஓட்டுனர் உயிரிழந்தார். மேலும் லாரியின் நான்கு சக்கரங்களும் அதிக சத்தத்துடன் வெடித்ததில் அருகில் உள்ளவர்கள் பயந்து வந்து பார்த்தபோதுதான் அசம்பாவிதம் நடைபெற்றது தெரிந்துள்ளது.

இதையடுத்து மின்சார வாரியத்திற்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறையினர் பிரேதத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் படிக்க