• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அருகே கத்தியைக் காட்டி கொள்ளையடித்தவர் கைது.

July 11, 2016 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் சுமைதூக்கும் தொழிலாளி அப்பாஸ் நேற்று முன்தினம் இரவு காய்கறி மார்கெட்டில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் பொது, அதே மார்கெட்டில் பணியாற்றும் சக தொழிலாளியான மொகமத் அபூபக்கர்(23) என்பவர் தன்னை கத்தியைக்கட்டி மிரட்டி தன்னிடம் இருந்த செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை வழிபறி செய்ததாக மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்த காவல்துறையினர் அபூபக்கரை கைது செய்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை மீட்டனர். பின்னர் அவர்மீது கொள்ளையடித்தல், அதற்காக ஆயுதங்களைக் கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது குறித்து கூறிய காவல்துறையினர், அபூபக்கர் மீது ஏற்கனவே குற்ற நடவடிக்கை, வழிபறி, சொத்துக்களைச் சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது எனத் தெரிவித்தனர். இவற்றில் ஈரோட்டில் 2 வழக்குகளும், மேட்டுப்பாளையத்தில் 4 வழக்குகளும் மேலும் 1 வழக்கு கரூர் காவல்நிலைய எல்லையிலும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க