• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

December 11, 2017 தண்டோரா குழு

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்திரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய அறிவிப்பை 15 நாட்களுக்குள் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட உத்திரவிடவேண்டும் என ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் வேணுகோபால் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் இதே கோரிக்கையுடன் உள்ள வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் அமர்வில் விசாரணையில் உள்ளது. எனவே இந்த மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் அமர்வுக்கு மாற்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க