December 11, 2017
தண்டோரா குழு
உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்திரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய அறிவிப்பை 15 நாட்களுக்குள் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட உத்திரவிடவேண்டும் என ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் வேணுகோபால் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் இதே கோரிக்கையுடன் உள்ள வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் அமர்வில் விசாரணையில் உள்ளது. எனவே இந்த மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் அமர்வுக்கு மாற்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.