• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கும்மிடிப்பூண்டியில் பெண்ணை காரை ஏற்றி கொன்ற 2 பேர் கைது

December 8, 2017 தண்டோரா குழு

கும்மிடிப்பூண்டியில் சீட்டு பணத்தகராறில் பெண்ணை காரை ஏற்றி கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தில் வசித்து வந்தவர் ராணியம்மாள். இவரது மகன் பழனி. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான கார் டிரைவர் கந்தன்
ரூ. 2 லட்சம் சீட்டு பணம் கொடுக்க வேண்டியிருந்தது. கந்தனிடம் சீட்டு பணத்தை தரும்படி பழனி அடிக்கடி கேட்டு வந்தார்.

இந்நிலையில் கந்தன் சிறுபுழல்பேட்டைக்கு காரில் நேற்று இரவு வந்தார்.அப்போது சீட்டு பணம் பிரச்சனை தொடர்பாக பழனிக்கும், கந்தனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கந்தன், வீட்டு வாசலில் அமர்ந்து இருந்த பழனியின் தாயார் ராணியம்மாள் மீது காரை ஏற்றினார்.இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து உடனே காரை அங்கேயே நிறுத்தி கந்தன் தப்பி ஓடினார்.இதனைக்கண்ட கிராம மக்கள் கந்தனை விரட்டி பிடித்து தாக்கினர். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தப்பி ஓடியபோது அதே பகுதியில் உள்ள சிறிய குட்டை ஒன்றில் கந்தன் மயங்கி விழுந்தார்.

இச்சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்

மேலும்,உயிருக்கு போராடிய கந்தனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ராணியம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் கந்தனுடன் இருந்த அவரது நண்பர்கள் சென்னை கோவூரைச்சேர்ந்த 2 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க