• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கும்மிடிப்பூண்டியில் பெண்ணை காரை ஏற்றி கொன்ற 2 பேர் கைது

December 8, 2017 தண்டோரா குழு

கும்மிடிப்பூண்டியில் சீட்டு பணத்தகராறில் பெண்ணை காரை ஏற்றி கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தில் வசித்து வந்தவர் ராணியம்மாள். இவரது மகன் பழனி. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான கார் டிரைவர் கந்தன்
ரூ. 2 லட்சம் சீட்டு பணம் கொடுக்க வேண்டியிருந்தது. கந்தனிடம் சீட்டு பணத்தை தரும்படி பழனி அடிக்கடி கேட்டு வந்தார்.

இந்நிலையில் கந்தன் சிறுபுழல்பேட்டைக்கு காரில் நேற்று இரவு வந்தார்.அப்போது சீட்டு பணம் பிரச்சனை தொடர்பாக பழனிக்கும், கந்தனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கந்தன், வீட்டு வாசலில் அமர்ந்து இருந்த பழனியின் தாயார் ராணியம்மாள் மீது காரை ஏற்றினார்.இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து உடனே காரை அங்கேயே நிறுத்தி கந்தன் தப்பி ஓடினார்.இதனைக்கண்ட கிராம மக்கள் கந்தனை விரட்டி பிடித்து தாக்கினர். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தப்பி ஓடியபோது அதே பகுதியில் உள்ள சிறிய குட்டை ஒன்றில் கந்தன் மயங்கி விழுந்தார்.

இச்சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்

மேலும்,உயிருக்கு போராடிய கந்தனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ராணியம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் கந்தனுடன் இருந்த அவரது நண்பர்கள் சென்னை கோவூரைச்சேர்ந்த 2 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க