• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக கோவை நீதிமன்றத்தில் வழக்கு

January 5, 2018 தண்டோரா குழு

பொதுமக்களை இழிவுபடுத்தும் விதமாக கட்டுரை எழுதியதாக நடிகர் கமல்ஹாசன் மீது கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவை கணபதி பகுதியை சேர்ந்த டிடிவி ஆதரவாளரான இளங்கோவன் என்பவர் கோவை 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆர்.கே.நகர் இடைதேர்தல் முடிவு குறித்து வார நாளிதழில் வெளியாகும் தொடரில் டிடிவி தினகரன் மற்றும் ஆர்.கே.நகர் மக்களை இழிவுப்படுத்தி எழுதியுள்ளதாக அந்த வரிகளை குறிப்பிட்டு நடிகர் கமலஹாசன் மீது இந்திய தண்டனை சட்டம் 500 மற்றும் 501 பிரிவின் கீழ் அவதூறு வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கோரி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கை வரும் 12 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார். அன்றைய தினம் இம்மனு விசாரணைக்கு உகந்ததா இல்லை என்று தெரியவரும்.

மேலும் படிக்க