• Download mobile app
20 Jan 2026, TuesdayEdition - 3632
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு நாள் ஆசிரியராக மாறும் பினராயி விஜயன்… ஆசிரியர் தினத்தில் பள்ளி செல்ல திட்டம்

August 26, 2016 தண்டோரா குழு

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் தான் படித்த பள்ளியில் ஆசிரியர் தினமான செப்.5-ந் தேதி வகுப்பு எடுக்கத் திட்டமிட்டுள்ளார். இதேபோல மற்ற எம்எல்ஏ-க்களும் தங்களது தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளில் அன்று வகுப்பு எடுத்து மாணவர்களுடன் சகஜமாக பழக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

கம்யூனிஸ்ட் முதல்வரைகளை விடக் கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயல்பாடுகள் புதுமையாக விளங்குகிறது. ஏனெனில், பிரசித்தி பெற்ற சபரிமலைக்கு இதுவரை எந்த கம்யூனிஸ்ட் முதல்வரும் செல்லாத நிலையில், முதல் முறையாக பினராயி விஜயன் சபரிமலை சென்று அங்கு நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டார்.

மேலும், கேரள தலைமைச் செயலகத்தில் முதல்வருக்கும் பொதுமக்களுக்கும் இடையே இருந்த பல்வேறு தடைகளை அகற்றிய பினராயி விஜயன், பொதுமக்கள் சுலபமாக முதல்வரைச் சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ந் தேதி பினராயி விஜயன் ஒரு நாள் ஆசிரியராக மாறுகிறார். அன்று அவர் தனது சொந்த தொகுதியான பினராய்க்கு சென்று அங்கு தான் படித்த அரசுப் பள்ளியில் மாணவர்களுக்குப் பாடம் வகுப்பு எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

இதேபோல, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு அன்று சென்று ஒரு நாள் வகுப்பு எடுத்து, மாணவர்களுடன் சகஜமாக பழகி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க