• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடாகவில் புதிதாக பொறுப்பேற்கும் அரசு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டும் – ஸ்டாலின்

May 15, 2018 தண்டோரா குழு

புதிதாக பொறுப்பேற்கும் அரசு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் 222 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வருகின்றன.இதில்,ஆளும் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பாஜக கைப்பற்றவுள்ளது.

இந்நிலையில்,கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எடியூரப்பாவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திரு. எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள். புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி,தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் எனக் கூறியுள்ளார்”.

மேலும் படிக்க