November 14, 2018 தண்டோரா குழு
கஜா புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 6 மாவட்டத்திற்கு விடுமுறையளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.அந்தமான் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து கஜா புயலாக மாறியுள்ளது.வங்க கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் தமிழகத்தை நோக்கி நெருங்கி வருவதாகவும்,நாளை (நவ.,15) மாலை பாம்பன் – கடலூர் இடையே கரையை கடக்கும் எனவும், இதனால் தமிழகம், புதுச்சேரியில் அதிக கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த கஜா புயல் கடலூர் மற்றும் வேதாரண்யம் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் முகப்புத்தக்க பதிவு மூலம் தெரிவித்ததிருந்தார்.இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் நாகை,காரைக்கால் மாவட்டங்களில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவுதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் திருவாரூர் மற்றும் ராமநாதபுரம்,புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (வியாழக்கிழமை) மதியம் பாம்பன் கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்க உள்ளது.குறிப்பாக கடலூர் மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் 700 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும்.இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை யாரும் மீன்பிடிக்க செல்ல கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.