• Download mobile app
07 May 2026, ThursdayEdition - 3739
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசிடம் தைரியமாக நிதி கேட்டால் தேவையான நிதி கிடைக்கும் – துரைமுருகன்

November 21, 2018 தண்டோரா குழு

மத்திய அரசிடம் தைரியமாக நிதி கேட்டால் தேவையான நிதி கிடைக்கும் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.கஜா புயலுக்கு திமுக அறிவித்த ரூ.1 கோடி நிவாரண தொகையை சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து திமுக பொருளாளர் துரைமுருகன் வழங்கினார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும்.மீட்பு பணிகளில் திமுக அரசியல் பார்க்கவில்லை,அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம்.மத்திய அரசிடம் கேட்கின்ற விதத்தில் அதிகாரமுடன்,தைரியமாக கேட்டால் தான் கேட்ட நிதியை பெற முடியும்”.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க