• Download mobile app
02 Jun 2025, MondayEdition - 3400
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

ஜெயலலிதா கைரேகை வழக்கில் மருத்துவர் பாலாஜி அக். 27-ல் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

October 13, 2017 தண்டோரா குழு

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கடிதத்தின் அடிப்படையிலேயே ஜெயலலிதாவின் கைரேகை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது திருப்பரங்குன்றம், அரவங்குறிச்சி மற்றும் தஞ்சை இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களின் ஃபாம் பீ படிவத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை வைக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அவர், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கடிதத்தின் அடிப்படையிலேயே ஜெயலலிதாவின் கைரேகை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கைரேகையுடன் ஜெயலலிதா உடல்நிலை குறித்த விளக்கம் இல்லை என்று கூறினார்.

மேலும், மதுசூதனன் விளக்கம் அளிக்க பொதுச்செயலாளர் அனுமதி அளித்தாரா என்ற நீதிபதியின் கேள்விக்கு முதன்மை செயலாளர் இல்லை என பதில் அளித்தார்.இதையடுத்து, இந்த வழக்கில் ஜெயலலிதா கைரேகையை அங்கீகரித்த டாக்டர் பாலாஜி 27-ம் தேதி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க