• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜப்பானில் 6 ஆண்டுகளுக்கு பிறகு புகையதொடங்கிய எரிமலை

October 12, 2017 தண்டோரா குழு

ஜப்பான் நாட்டின் ஷின்மோடேக் எரிமலை சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு புகைய தொடங்கியுள்ளது.

ஜப்பான் நாட்டின் தென் பகுதியில் ஷின்மோடேக் எரிமலை அமைந்துள்ளது.இந்த எரிமலை, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உருவானதாக கூறப்படுகிறது.கடந்த 1716, 1717, 1771, 1822, 1959, 1991, 2008, 2009, 2011 மற்றும் 2௦17 ஆகிய ஆண்டுகளில் எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், இந்த எரிமலை நேற்று மீண்டும் புகைய தொடங்கி, அதன் புகையும் சாம்பலும் வானில் சுமார் 300 மீட்டர் வரை பரவியுள்ளது. இன்னும் சில தினங்களுக்கு அந்த எரிமலை தீவிரமாக செயல்பட வாய்ப்புண்டு.இதனால் அப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல கூடாது என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க