• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி

November 11, 2017

ஜெய்ப்பூரிலிருந்து புதுடெல்லிக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், விமான ஓட்டுநரின் பணி நேரம் முடிந்த காரணத்தினால் விமானம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் விமானநிலையத்திலிருந்து நேற்று முன் தினம்(நவம்பர் 9), ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘அலியான்ஸ் ஏர்’ மூலம் புதுதில்லிக்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். இந்நிலையில், அந்த விமானத்தின் ஓட்டுநர், தனது பணி நேரம் முடிந்துவிட்டதால், விமானத்தை இயக்க மறுத்துவிட்டார்.

இதனையடுத்து அந்த விமானத்திலிருந்த பயணிகளை விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர். அதன் பிறகு, சிலரை பேருந்து மூலம் புதுதில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும் சில பயணிகளை அங்குள்ள ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். வேறு சிலரை, நேற்று(நவம்பர் 1௦) காலை,வேறு விமானத்தின் மூலம் புதுதில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க