• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்கிறது- ரயில்வே நிர்வாகம்

October 14, 2017 தண்டோரா குழு

விமானங்களில் வழங்கப்படும் தரமான உணவுகளை போன்று ரயில்களிலும் தரமான உணவுகளை வழங்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.

ரயில் பயணிகளுக்கு கொடுக்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்தும் விதமாக புதிய வகை உணவுகளை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தவுள்ளது.இதுகுறித்து முடிவு செய்ய 5 மாதங்களுக்கு முன்பு ஒரு குழுவை அமைத்தது.இந்த குழு புதிய உணவு பட்டியலை தயார் செய்து ரயில்வே நிர்வாகத்திடம் அனுப்பியுள்ளது.

இந்த புதிய வகை உணவுப்பட்டியலில் கிரேவி இருக்காது.இது தவிர வெஜ் பிரியாணி, ராஜ்மா சாவல், ஹக்மா நூடுல்ஸ், புலாவ் மற்றும் லட்டோ போன்றவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.மேலும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் உணவு வகைகளை மாற்றி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் அமல்படுத்தபடும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க