• Download mobile app
17 Sep 2026, ThursdayEdition - 3872
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய பெண் கீதா கோபிநாத்க்கு ஐ எம் எஃப்பின் முக்கிய பதவி!

October 2, 2018 தண்டோரா குழு

ஐ எம் எஃப் சர்வதேச நாணய நிதியத்திற்கு தலைமை பொருளாதார நிபுணராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத்(46) பொருளாதாரம் மற்றும் செலாவனி குறித்த பணிகளில் திறம்பட செயல்படுபவர் என அறியப்பட்டவர்.தற்போது இப்பதவியில் இயங்கிவரும் மௌரிஸ் அப்ஸ்ட்ஃபெல்ட் கடந்த ஜூலை மாதத்தில் ஓய்வு பெற்றார்.இதையடுத்து அவருக்கு அடுத்தபடியாக இப்பதவிக்கு கீதா கோபிநாத் வரவுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை நிர்வாகி பதவியை ஏற்கவுள்ள முதல் பெண்மணி இவர்.

கீதா கோபிநாத் தற்போது கேரள முதலமைச்சர் பினராய் விஜயனின் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.ஐ எம் எஃப்பின் இப்பதவிக்கு வரும் இரண்டாவது இந்தியர் இவர் தான்.இதற்கு முன் முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் இப்பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க