• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் ஹரிகிருஷ்ணாவின் சடலத்துடன் செல்ஃபி எடுத்த ஊழியர்கள் நீக்கம்

September 1, 2018 தண்டோரா குழு

மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகன் ஹரிகிருஷ்ணாவின் சடலத்துடன் மருத்துவமனை ஊழியர்கள் செல்பி எடுத்துக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் மகனும்,நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி உயிரிழந்தார்.தெலங்கானா நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி- அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்றபோது,ஹரிகிருஷ்ணாவின் கார் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரிகிருஷ்ணா,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த நடிகர் ஹரிகிருஷ்ணாவின் சடலத்துடன் மருத்துவமனை ஊழியர்கள் 4 பேர் செல்ஃபி எடுத்துள்ளனர்.இந்த போட்டோவை சமூக வலைதளங்களிலும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.இதற்கு கண்டனங்களும்,எதிர்ப்புக்களும் குவிந்து வருவதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் 4 பேரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அவர்களின் இந்த செயலுக்காக மருத்துமனை நிர்வாகம் மன்னிப்பு கோரி உள்ளது.

மேலும் படிக்க