• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீபிகா படுகோனை உயிரோடு எரித்தால் 1 கோடி – ஷத்ரிய மகாசபா அறிவிப்பு

November 20, 2017 தண்டோரா குழு

நடிகை தீபிகா படுகோனை உயிரோடு எரிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அகில இந்திய ஷத்ரிய மகாசபா அறிவிந்துள்ளது.

நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’பத்மாவதி’. இப்பபடம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது.

படத்தில் ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினி வேடத்தில் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். ஆனால் படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி பல்வேறு அமைப்பினர் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி ராஜஸ்தான், குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் படத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், பத்மாவதி திரைப்படத்தில் நடித்த தீபிகா படுகோனை உயிரோடு எரிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அகில இந்திய ஷத்ரிய மகாசபா என்ற அமைப்பின் இளைஞர் அணித் தலைவர் புவனேஸ்வர் சிங்கின் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பத்மாவதி திரைப்படத்துக்கு தடை கோரும் வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் டிசம்பர் 1-ம் தேதி படம் வெளியாகாது என இயக்குநர் சஞ்சய் லீலா தெரிவித்து உள்ளார்.

மேலும், பத்மாவதி திரைப்படத்தில் ராணி பத்மினியை தவறாக சித்தரிக்கும் காட்சிகளை நீக்கக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க