• Download mobile app
02 Jul 2025, WednesdayEdition - 3430
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தோனேசியா கடற்கரையில் கரை ஒதுங்கிய 10 திமிங்கலங்கள்

November 14, 2017 தண்டோரா குழு

இந்தோனேசியா நாட்டின் கடல்பகுதியில் 10 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது.கரை ஒதுங்கிய 10 திமிங்கலங்களில் நான்கு திமிங்கலங்கள் இறந்துவிட்டதாக மீனவளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியா கடற்கரையில், “Sperm Whales” இனத்தைச் சேர்ந்த சுமார் 10 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.திமிங்கல மீன்கள் கரை ஒதுங்கியிருப்பதை கண்டவர்கள், உடனே மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த அவர்கள், கடற்கரைக்கு விரைந்து வந்து
பார்த்தபோது, பலத்த காயங்களுடன், இரண்டு திமிங்கிலங்கள் இறந்திருப்பதை கண்டார்கள்.

மேலும்,மிகவும் பலவீனமாக இருந்து மற்ற இரண்டு திமிங்கலங்களும்,சிறிது நேரத்தில் உயிரிழந்தது. தகவல் அறிந்த உள்ளூர் மீனவர்களும், மக்களும் உடனே, அங்கு விரைந்து, கரை ஒதுங்கிய மீன்களை மீண்டும் கடலுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.

இந்தோனேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் திமிங்கலங்கள், டால்பின்கள், மட்டும் பல கடல் விலங்குகள் கடற்பகுதியில் கரை ஒதுங்குகின்றன. மேலும், கடந்த ஆண்டு, இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்திலுள்ள ப்ரோபோளிங்கோ மாவட்டத்தின் கடல் பகுதியில், 30 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கின, அவற்றில் 10 திமிங்கலங்கள் உயிரிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க