• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்கள் பயணிகளின் பாதுகாப்புக்காக விரைவில் சுவாதி ஆப்ஸ்

July 14, 2016 தண்டோரா குழு

மென்பொறியாளர் சுவாதி சென்னையில் கடந்த ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த “சுவாதி மொபைல் அப்ளிகேஷன்” என்ற ஆப்ஸை விரைவில் அறிமுகம் செய்ய ரயில்வே பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது.

மேலும், இந்த மொபைல் அப்ளிகேஷனை, ரயில்வே பாதுகாப்புப் படையுடன் இணைந்து சுவாதி பணியாற்றிய இன்போசிஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்குகிறது. ரயிலில் பயணிக்கும் பெண்கள் தங்களுக்கு எந்த நேரத்தில் உதவித் தேவைப்பட்டாலும் இந்த மொபைல் ஆப்பில் இருக்கும் SOS என்ற பட்டனை அழுத்தினால், அந்த அழைப்பு பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கும், காவல் அதிகாரிகளின் மொபைல் குழுவுக்கும் வரும்.

அதுமட்டுமின்றி, ஒரே நேரத்தில் பல குழுக்களை இது அலர்ட் செய்வதால், உடனடி நடவடிக்கையில் இறங்க வசதியாக இருக்கும். அருகிலுள்ள இரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு ஒருசில நிமிடங்களில் வந்துவிடுவார்கள். இந்த “ஆப்” புக்கு சுவாதியின் பெற்றோரின் அனுமதி கேட்டு அவர்கள் அனுமதியுடன் சுவாதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க