• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

July 30, 2016 தண்டோரா குழு

சமீபமாகக் கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் அங்கே உற்பத்தியாகி தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாகத் தமிழகத்தில் பாடும் தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து 47.2 அடியை எட்டியது. இதனால் அணை அதன் முழு கொள்ளளவை எப்போது வேண்டுமானாலும் எட்டும் நிலை உருவாகியுள்ளது.

இதையடுத்து அணையில் இருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது என்பதாலும், ஓசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 2,320 கன அடி வீதம் நீர் வரத்து உள்ளதால், அணையின் பாதுகாப்பை கருதி வரும் நீர் அப்படியே வெளியேற்றப் பட்டு வருவதாலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய ஐந்து மாவட்டத்தில் உள்ள தென்பெண்னை ஆற்றுக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து 1,447 கன அடியாக உள்ளது. இதனால் வேகமாக அதன் முழு கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க