• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல் பெண் வழக்கறிஞர் உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்வு

January 12, 2018 தண்டோரா குழு

இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் 35 ஆண்டுகளுக்கு மேல் வழக்கறிஞராக இருந்து வருபவர் இந்து மல்ஹோத்ரா(61). இந்நிலையில் முதன்முறையாக பெண் மூத்த வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ரா உச்சநீதிமன்ற நீதிபதியாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வழக்கமாக பல்வேறு நிதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி அந்த அனுபவத்தின் அடிப்படையில் கொலீஜியம் மூலம் உச்சநீதிமன்ற கோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்பர். ஆனால்,இந்து மல்ஹோத்ராவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலீஜியம் உச்சநீதிமன்ற நீதிபதியாக நேரடியாக தேர்வுசெய்ய பரிந்துரைத்தது.

இந்து மல்ஹோத்ரா,மூத்த வழக்கறிஞர்களான ரோஹின்டன் பாலி நாரிமன், யு.யு. லலித், எல். நாகேஸ்வரராவ் ஆகியோருக்கு ஜூனியராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியஅரசு இவரது தேர்வை ஏற்கும் பட்சத்தில் அடுத்த 4 ஆண்டுகள் இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகிப்பார்.

மேலும் படிக்க