• Download mobile app
16 Feb 2025, SundayEdition - 3294
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எப்.ஐ.ஆர் பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு

September 7, 2016 தண்டோரா குழு

எப்.ஐ.ஆர் பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் அதனை இணையதளத்தில் பதிவேற்ற செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய இளைஞர் வக்கீல்கள் சங்கத்தினர் தாக்கல் செய்த மனு மீதான வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி. நாகப்பன் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது.

அப்போது ‘முதல் தகவல் அறிக்கை (ஃஎப்ஐஆர்) பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள், இணையதளத்திலும் அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இன்டர்நெட் வேகம் குறைவாக உள்ள இடங்களில் 72 மணி நேரத்திற்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என்ற காரணத்தைக் காட்டி குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆதாயம் தேடக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், தீவிரவாதம், பாலியல் தொடர்பான வழக்குகளில் எப்.ஐ.ஆர் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.’

மேலும் படிக்க