• Download mobile app
07 Jul 2025, MondayEdition - 3435
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஜீயர் ஸ்வாமிகளுக்கு ஆதரவாக இந்து அமைப்புகள் சார்பாக உண்ணாவிரதம்

January 18, 2018 தண்டோரா குழு

கோவையில் ஜீயர் ஸ்வாமிகளுக்கு ஆதரவாக  இந்து அமைப்புகள் சார்பாக  உண்ணாவிரதம் துவங்கியது.

ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய வைரமுத்து நிபந்தனையற்ற மன்னிப்பை ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள,  ஆண்டாள் முன் கேட்க வலியுறுத்தி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீமத் ராமானுஜ ஜீயர்  ஸ்வாமிகள் நேற்று முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஜீயர் ஸ்வாமிகளுக்கு ஆதரவாக கோவையில் பஜனை செய்து நேற்று பல இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று(ஜன 18)  ஸ்ரீ வேணுகோபால சாமி கோவிலில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண்டாள் குறித்து தான் தெரிவித்த கருத்து யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக வைரமுத்து ஏற்கனவே தெரிவித்து இருந்தாலும், ஆண்டாள் சன்னதியில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க