• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆந்திர தடுப்பணையில் குதித்து தற்கொலை விவசாயி குடும்பத்திற்கு நிதியுதவி

July 30, 2016 தண்டோரா குழு

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியில் தமிழக ஆந்திர எல்லையில் கனகநாச்சியம்மன் கோவில் அருகே ஆந்திர அரசு 12 அடி தடுப்பணையை கட்டி முடித்த நிலையில், சமீபமாகப் பெய்த கன மழையால் அணை நிரம்பி வழிகின்றது.

இதனைப் பார்க்க சென்ற பக்கத்து ஊரான பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சீனு தடுப்பணையில் குதித்து நீந்த முயன்ற போது நீரில் மூழ்கினார்.

இவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை இதனால் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதி காவல் துறையினர் ஆந்திர தீயணைப்புத் துறையினருடன் இணைந்து தேடுதல் பணியைச் செய்தனர். ஆனால் போதிய உபகரணங்கள் இன்றி தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

பின்னர் சடலத்தை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழக முதல்வர் அவரது குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க