October 25, 2018 
தண்டோரா குழு
                                20 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிதும் எதிர்பார்ப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று 3வது நீதிபதி சத்யநாராயணன் இன்றுஅதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
“18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து திமுக கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், ஒருவேளை அத்துடன் சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து வந்தால் அதை எதிர்கொள்வது குறித்தும் விவாதித்ததாகவும் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.