August 9, 2018
தண்டோரா குழு
கோவையில் கலைஞர் இறந்த துக்கம் தாங்காமல் திமுக விசுவாசி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைருமான கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி மாலை காலமானார்.நேற்று மாலை லட்சக்கணக்கான தொண்டர்களின் கண்ணீர் கடலில் மிதந்தபடி கருணாதியின் இறுதி ஊர்வலம் நடைபெற்று மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யபட்டது.இதற்கிடையில்,கருணாநிதியின் இறப்பு செய்தி கேட்டு பல தொண்டர்கள் தங்கள் உயிரை மாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில்,கோவை அருகே உள்ள ஒக்கிலிப்பாளையம் குப்பாண்ட கவுண்டர் தெரு பகுதியில் வசிப்பவர் நடராஜன்.அவருடைய மகன் மணி (52) சைக்கிள் கடை வைத்து நடத்தி வருகிறார்.நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்கை பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று அழுது கொண்டே ரூமிற்கு என்று தாழிட்டு கொண்டார்.
இன்று அவரது உறவினர் பார்த்த போது மணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இதையடுத்து,செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.